உத்திரப் பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், கடந்த மாதம் 14 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென்று மாயமானர். மாலை வரை சிறுமி வீடு திரும்பாத நிலையில், அந்த பெண்ணின் பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் அந்த இளம் பெண் கிடைக்காத நிலையில், மறுநாள் பிற்பகல் நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, அந்த பகுதியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மீட்டுள்ளனர். அப்போது, அவரது உடலின் பல இடங்களில் பலத்த காயங்கள் இருந்துள்ளன.

அத்துடன், சிறுமியின் முகத்தின் கண் மற்றும் பிற பாகங்களில் அதிக காயங்கள் இருந்தது தெரிய வந்தது. அதே போல், அந்த இளம் பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கொலை முயற்சியில் சிறுமியின் கழுத்தை நெரித்ததில், அவரின் கழுத்து பகுதி பலத்த காயங்கள் இருந்ததும், அந்த பெண் வாய் திறந்து பேசக்கூடாது என்பதற்காக, கொடூரத்தின் உச்சமாக அந்த பெண்ணின் நாக்கு பகுதி அறுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்த பெண் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதால், அந்த பெண்ணுக்கு உயர் சிகிச்சைக்காக டெல்லி ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் அந்த பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அந்த இளம் பெண், கழுத்து முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் தற்போது உயிரிழந்துள்ளார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவத்தை, கடந்த 2012 ஆம் ஆண்டு அரங்கேறிய இளம் பெண் நிர்பயா சம்பவத்தோடு ஒப்பிட்டு, பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், இளம் பெண் உயிரிழப்பு காரணமான 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட வேண்டும் என்று, ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.