இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), தற்போது மிக மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்துள்ளது.

ருத்ரம்-1 என்ற இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள பலசோர் கடற்கரையில் இருந்து சுகோய் -30 போர் விமானத்தின் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.  இந்த ஏவுகணை இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) போர் விமானங்களுக்கு வான்வெளியில் மேலாதிக்கத்தை வழங்கும்.

இது முதன்மையாக எதிரிகளின் வான் பாதுகாப்புகளை முடக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரி நாடுகளின் கண்காணிப்பு ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அழிப்பதற்காக பல உயரங்களில் இருந்து ஏவப்படும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை ரேடாரால் கண்டறிய முடியாது. அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளே இத்தகைய ரேடார் எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்துள்ளன.

இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். 

எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் கதிர் வீச்சுக்கு எதிரான ருத்ரம் ஏவுகணை சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த ஏவுகணையை மேம்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பாலசோர் என்ற இடத்தில் இன்று சோதித்து பார்க்கப்பட்டது. இங்கு நிறுத்தபட்டு இருந்த சுகோய் 30 போர் விமானத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது.

இந்த ஏவுகணை சோதனைக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்கார் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் தனது ட்விட்டர் பதிவில், ''புதிய தலைமுறை கதிர்வீச்சு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த ஏவுகணையை உள்நாட்டில் மேம்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும் வெற்றிக்கு பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

எதிரி நாடுகளின் கண்காணிப்பு ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை பல்வேறு உயரங்களில் இருந்தும் அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை ரேடாரில் பார்க்க முடியாது. எதிரி நாடுகள் இந்த ஏவுகணையை கண்டறிந்து அழிக்கவும் முடியாது. மேலும், வேறு எந்த தகவல் தொடர்புகள் வாயிலாகவும் பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.