கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பை அடுத்து சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டவும், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், மசூதி கட்டும் பணிகளை, தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் புதிய மசூதி கட்டுவதற்காக பணிகளை  இஸ்லாமிய கலாச்சார அமைப்பு மேற்கொண்டு வந்தது.


இந்நிலையில் புதிய மசூதிக்கு அடுத்த மாதம் 26-ந் தேதி அடிக்கல் நாட்ட உள்ளனர். உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை புதிய மசூதியை கட்ட இருக்கிறது. ஒரே நேரத்தில் 2 ஆயிரம்பேர் தொழுகை நடத்தும் அளவில் பிரமாண்ட மசூதி கட்டப்படுகிறது. 
புதியதாக கட்டப்பட உள்ள பாபர் மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.  

ஏற்கனவே இருந்த பாபர் மசூதியை விட பெரிய அளவில் இருக்கும் எனவும் மேலும் மசூதியின் பின்பகுதியில் மருத்துவமனை இடம் பெறும் எனவும் சூரிய மின்சக்தி வசதியையும், இயற்கை வெப்ப நிலை பராமரிப்பு முறையையும் கொண்டதாக புதிய மசூதி அமையும் வகையில் மாதிரி படம் வெளியாகி உள்ளது. 

மருத்துவமனையுடன் ஒரு நர்சிங் கல்லூரி மற்றும் மருத்துவ சார்பு கல்லூரியும் இணைத்துக் கட்டப்பட்ட இருக்கிறது என இஸ்லாமிய கலாச்சார அமைப்பு தெரிவிக்கிறார்கள்.