உக்ரைன்-ரஷ்யா போரால் பங்கு சந்தை நஷ்டம்.. மனமுடைந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை!

உக்ரைன்-ரஷ்யா போரால் பங்கு சந்தை நஷ்டம்.. மனமுடைந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை! - Daily news

மதுரையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ukraine war

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. 

மேலும் இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன.  இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.  

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதனைத்தொடர்ந்து  உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வந்த நிலையில் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் மதுரை பழைய குயவர்பாளையம் பச்சரிசிக்கார தோப்பை சேர்ந்தவர் நாகராஜன் வயது 46. இவரது மனைவி லாவண்யா வயது 34. இவர்களுக்கு ரக்ஷிதா, அர்ஜூன் என 2 குழந்தைகள் உள்ளனர். நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக இருந்து வந்தார். மேலும், பங்குச்சந்தையில் அதிகளவு முதலீடு செய்து வந்துள்ளார். இதற்காக அவர் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வந்தது. 

மேலும் இதன் காரணமாக, நாகராஜனுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், நேற்று காலை குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டு நிலையில், வீட்டில் இருந்த நாகராஜன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, நாகராஜனின் உறவினர்கள் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது நீண்ட நேரமாகியும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். 

அதனைத்தொடர்ந்து  நாகராஜனும், மனைவி லாவண்யவும் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இதுகுறித்து, தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.  அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment