கொலையும் பண்ணிவிட்டு மாலையும் போட்டு சென்ற ரவுடி கும்பல்!

கொலையும் பண்ணிவிட்டு மாலையும் போட்டு சென்ற ரவுடி கும்பல்! - Daily news

ரவுடியை வெட்டி படுகொலை செய்துவிட்டு அவரது உடலுக்கு மாலை போட்டுவிட்டுச் சென்றுள்ளனர் கொலையாளிகள்.

murder

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்.  35 வயதான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.  அதுமட்டுமல்லாமல் பிரபல ரவுடி குணா, சுந்தரபாண்டி ஆகியோரின் நெருங்கிய நண்பர் கௌரிசங்கர்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே ஆலங்குடியில் தனக்கு சொந்தமான தேங்காய் நார் உரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த கௌரிசங்கர் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சமயபுரம் புதுத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டு பிறந்தநாள் விழாவிற்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும் என்று அழைத்திருக்கிறார்கள்.

இதனை நம்பி அதற்கு சரி என்றதும் கார்த்திக், சித்தார்த்தன் ஆகியோர் 7 பேர் கொண்ட கும்பல் தேங்காய் நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரிசங்கர் உடன் மது அருந்திவிட்டு ஆசீர்வாதம் வாங்க வந்தது போல் நடித்து உள்ளார்கள். அப்போது அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கௌரிசங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்கள்.

மேலும் கொலை செய்த பின்னர் கையில் வைத்திருந்த பூ மாலையை அவர் மீது போட்டுவிட்டு தப்பிச் சென்று இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல ரவுடி குணா, சுந்தரபாண்டி ஆகியோரின் மற்றொரு கூட்டாளி பிரபுவும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக சமயபுரம் கார்த்தி , புதிய நல்லூர் சித்தார்த்தன்,  சந்திரன் உள்ளிட்டோருடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment