பரபரப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று நவம்பர் 8ம் தேதி எபிசோடு மிகவும் அனல் பறக்கும் வகையில் இருந்தது என சொல்லலாம். வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தருணத்தில் பேசிய ஒரு முக்கிய விஷயத்தை எடுத்து LED டிஸ்ப்ளேவில் போட்டு அது குறித்து விவரிக்குமாறு பிக் பாஸ் தெரிவிக்க ஒவ்வொருவரும் அவர்கள் பேசிய விஷயங்கள் பற்றி அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய, வினுஷா தேவி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது, நிக்சன் தன்னை பாடி ஷேமிங் செய்யும் விதமாக பேசியது குறித்து மிகவும் எமோஷனலாக பகிர்ந்து கொண்டார்.

சரியாக அந்த விஷயத்தை பிக் பாஸ் LED திரையில் காண்பித்ததும் நிக்சன் அதற்கு விளக்கம் சொல்ல கொஞ்சம் தடுமாறி, பின்னர் சமாளித்து இது குறித்து வினுஷாவிடம் ஏற்கனவே பேசி விட்டதாக தெரிவிக்க, அது குறித்து விசித்ரா அவர்கள் கேள்வி எழுப்பிய போது மாயா & ஜோவிகா BULLY GANG எதிர்த்து வாதிட விசித்ரா, வினுஷா தேவிக்கு ஆதரவாக தன் குரலை உயர்த்தி பேசினார். இந்த நிலையில் நடிகை வினுஷா தேவி நடந்த உண்மையான விஷயங்களை மிகத் தெள்ளத்தெளிவாக பகிர்ந்து உள்ளே இருக்கும் நிக்ஸன் மற்றும் BULLY GANGஐ தோலுரித்து காட்டும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில்,

"எனக்காக நான் நிற்கிறேன்:
நான் இப்போது பிக் பாஸ் உள்ளே இருக்க முடியாது, ஆனால் நான் இதைப் பற்றி பேசவும், எனக்காக நிற்கவும் விரும்புகிறேன்.

முதல் வாரத்தில், நிக்சனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது, நான் அவரை ஒரு சகோதரனாக உண்மையாகவே கருதினேன். நான் அவருடன் அப்படித்தான் நடந்து கொண்டேன், ஆரம்பத்தில், அவர் எப்போது என்னை ட்ரோல் செய்யத் தொடங்கினார் என்பதை நான் பொருட்படுத்தவில்லை, அது நன்றாக வேடிக்கையாக இருந்தது. இருப்பினும், நேரம் செல்லச் செல்ல, அவர் எல்லைகளைக் கடக்கத் தொடங்கினார், மேலும் அவரது நடவடிக்கைகள் என்னைக் காயப்படுத்தியதால் அவரை நிறுத்தும்படி நான் அவரிடம் கேட்க வேண்டியிருந்தது. இந்த நடத்தைக்காக நான் அவரை நாமினேட் செய்தேன். ஒரு நாள், அவர் மன்னிப்பு கேட்டார், ஆனால் அது ட்ரோலிங்கிற்காக மட்டுமே இருந்தது, அவர் செய்த பாடி ஷேமிங்கிற்கான கருத்து அல்ல.

சில விஷயங்களை சொல்லத் தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.

1. நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நிக்சன் மன்னிப்பு கேட்கவில்லை அல்லது பாடி ஷேமிங் பற்றி பேசவில்லை.

2. நிக்சன் என்னிடம் சொன்னதாகவும் இவை அனைத்தும் எனக்குத் தெரியும் என்றும் பொய் பேசி இருக்கிறார். "இல்லை எனக்கு தெரியாது".

3. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுதான் நான் அதை பற்றி அறிந்தேன்.

4. இப்போது நிக்சன் மன்னிப்பு கேட்டாலும் அது நிக்சனை நல்ல நபராக மாற்றாது.

5. BULLY கும்பலுக்கான எனது பதில் "என்னை ஆட்சேபிப்பது நிச்சயமாக எனக்கு வேடிக்கையாகவோ நகைச்சுவையாகவோ இல்லை".

6. கடந்த வாரத்தில் "உரிமை குறல்" எழுப்பிய அந்த பெண்ணியவாதிகள் எங்கே?

என்னை வளர்த்ததற்கு நன்றி விச்சு மா ❤️ வீட்டில் இருக்கும் போது நிக்சனிடம் மிகுந்த மரியாதையை வைத்திருந்தேன், அவரால் எனக்கு ஏற்பட்ட வலியை பொருட்படுத்தாமல் அவரை ஒரு சகோதரனைப் போல கருதினேன். இருப்பினும், அவர் என்னைப் பற்றி கூறிய வீடியோ மற்றும் கருத்தைப் பார்த்த பிறகு, நான் அவர் மீதான மரியாதையை இழந்துவிட்டேன்.

வார இறுதி எபிசோடில் கமல் சார் இந்த பிரச்சனை குறித்து உரையாற்றுவார் என்று நம்புகிறேன்.

இந்த பிரச்சினையில் நிக்சனுக்கு எதிராக நிற்கும் மக்களுக்கும், எனக்காக நிற்கும் மக்களுக்கும் நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன் 🙏🏾
-வினுஷா தேவி ஜி".

என தெரிவித்திருக்கிறார். அந்த பதிவு இதோ…