விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்த சீரியல்களில் நடித்த பலரும் ரசிகர்களின் பேராதரவை பெற்று நட்சத்திரங்களாக மாறி உள்ளனர்.பலர் சினிமாவிலும் கலக்கி வருகின்றனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி.

இந்த தொடரின் நாயகனாக அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் ராஜு நடித்து வந்தார்.பிரியங்கா குமார் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

2021 ஜனவரி மாதம் தொடங்கிய இந்த தொடர் , வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.200 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் ஹிட் தொடராக ரசிகர்கள் மத்தியில் முன்னேறியுள்ளது.

தற்போது இந்த தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரில் இருந்து நாயகன் தர்ஷன் விலகியுள்ளார் என்றும் இவருக்கு பதிலாக கன்னடத்தில் பிரபலமான ஸ்வாமிநாதன் நடித்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இதனை அடுத்து இவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.இந்த தகவல் உண்மையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

View this post on Instagram

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)