விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அஷ்வின் குமார்.இதற்கு முன் சீரியல்கள்,ஆல்பம் பாடல்கள்,படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அஷ்வின்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இவர் நடித்த ஆல்பம் பாடல்கள் பெரிய வெற்றியை அடைந்தன.அடுத்ததாக Trident Arts நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாகும் வாய்ப்பை பெற்றார் அஷ்வின்.என்ன சொல்ல போகிறாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

அவந்திகா மிஸ்ரா,தேஜு அஷ்வினி இருவரும் படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர்.குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இன்று Trident ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அஷ்வின் தனது அடுத்த படத்தையும் இதே நிறுவனம் இயக்குகிறது என்ற தகவலை தெரிவித்துள்ளார்.அடுத்த படத்தின் இயக்குனர் யார் என அஷ்வின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

View this post on Instagram

A post shared by Ashwin Kumar Lakshmikanthan (@ashwinkumar_ak)