விஜய் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இதன் முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அன்ஷு ரெட்டி.

இந்த தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.இதனை தொடர்ந்து ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவற்றை தவிர பல தெலுங்கு தொடர்களில் நடித்து தென்னிந்தியாவின் முக்கிய சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் அன்ஷு ரெட்டி.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் அன்ஷு ரெட்டி தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவருக்கும் சௌமித் ரெட்டி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 25ஆம் தேதி  நடந்து முடிந்துள்ளது.இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் அன்ஷு , அதில் உங்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ரசிகர் கேட்க நான் ஏற்கனவே நிச்சயமான பெண் என்று தெரிவித்துள்ளார் அதோடு திருமணத்துக்கு பிறகு நடிப்பை கைவிடப்போகிறீர்களா என ரசிகர் கேட்க சோகமான ஸ்மைலி ஒன்றை போட்டு உறுதி செய்வதுபோல தெரிவித்துள்ளார்.