வரும் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

“தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் வரும் 2022 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமைகளுடன் 23 நாட்களும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுவதாக” தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, 2022 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உட்பட மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவற்றுடன், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, தெலுங்கு வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, மே தினம், ரம்ஜான், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, மிலாது நபி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், உழவர் திருநாள், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் உட்பட 6 விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன.

அதாவது, 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ள நிலையில், இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் இறையன்பு தற்போது வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்யைின் படி,

குடியரசு தினம் 26-01-2022 - புதன்கிழமை

வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு வங்கிகள்) 01-04-2022 - வெள்ளிக்கிழமை

தெலுங்கு வருடப் பிறப்பு 02-04-2022 - சனிக்கிழமை

தமிழ் புத்தாண்டு/மகாவீரர் ஜெயந்தி/டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் 14-04-2022 - வியாழக்கிழமை

புனித வெள்ளி 15-04-2022 - வெள்ளிக்கிழமை

மே தினம் 01-05-2022 - ஞாயிற்றுக்கிழமை

ரம்ஜான் 03-05-2022- செவ்வாய்க்கிழமை

பக்ரீத் 10-07-2022 - ஞாயிற்றுக்கிழமை

மொகரம் 09-08-2022 - செவ்வாய்க்கிழமை

சுதந்திர தினம் 15-08-2022 - திங்கட்கிழமை

கிருஷ்ண ஜெயந்தி 19-08-2022 - வெள்ளிக்கிழமை

விநாயகர் சதுர்த்தி 31-08-2022 - புதன்கிழமை

காந்தி ஜெயந்தி 02-10-2022 - ஞாயிற்றுக்கிழமை

ஆயுத பூஜை 4-10-2022 செவ்வாய்க்கிழமை

விஜயதசமி 5-10-2022 - புதன்கிழமை

மிலாதுன் நபி 9-10-2022 - ஞாயிற்றுக்கிழமை

தீபாவளி 24-10-2022 - திங்கட்கிழமை

கிறிஸ்துமஸ் 25-12-2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆகிய நாட்கள் பொது விடுமுறை தினங்களாக தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.