பாலியல் ஆசைக்கு வர மறுத்த 19 வயது கல்லூரி மாணவியை, சக கல்லூரி மாணவர்கள் 5 பேர் சேர்ந்து வாயில் விஷம் ஊற்றி மிகவுமு் கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஹலினா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், தனது பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

அப்போது, அந்த இளம் பெண்ணை, அந்த பெண்ணுடன் உடன் படிக்கும் 5 மாணவர்கள் சேர்ந்து, அந்த பெண்ணை பேச வேண்டும் என்று தனியாக அழைத்து உள்ளனர்.

அதன்படியே, அந்த பெண்ணும் தனியாக சென்ற நிலையில், அந்த 5 கல்லூரி மாணவர்களும், “நாங்கள் உன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும்” என்று கூறி, அந்த கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி உள்ளனர்.

ஆனால், அந்த மாணவி, அந்த மாணவர்களின் பாலியல் இச்சைக்கு முற்றிலுமாக இணங்க மறுத்து விட்டார்.

இதனையடுத்து, அந்த மாணவியை அவர்கள் தொடர்ந்து திட்டி தொந்தரவு செய்து வந்த நிலையில், நேற்று மாலை அந்த மாணவியை பின் தொடர்ந்து அந்த 5 பேரும் சென்று உள்ளனர்.

அப்போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத குறிப்பிட்ட ஒரு இடத்தில் அந்த பெண் சென்றுக்கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த அந்த 5 மாணவர்களும், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அந்த பெண்ணின் வாயில் ஒரு மருந்தை ஊற்றி, அவரை வலுகட்டாயமாக குடிக்க வைத்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த மாணவர்களிடம் இருந்து தப்பித்து அந்த பெண் வீட்டிற்கு சென்ற நிலையில், வாந்தி எடுத்து மயக்கமடைந்து உள்ளார்.

இதனால் பதறிப்போன அந்த பெண்ணின் உறவினர், அந்த பெண்ணை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அந்த பெண் சிகிச்சைப் பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான விசாரணை மற்றும் உயிரிழந்த பெண்ணின் உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் முடிவுகளின் அடிப்படையில் தான், கல்லூரியில் உடன் படிக்கும் 5 மாணவர்கள், மாணவியை கட்டாயப்படுத்தி வாயில் விஷம் ஊற்றி கொடூரமான முறையில் கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம், அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், வெறிப்பிடித்த அந்த 5 கல்லூரி மாணவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.