விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும்,நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.அப்படி இந்த தொடரில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த தொடர் நாம் இருவர் நமக்கு இருவர்,500 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் நிறைவுக்கு வந்தது.இந்த தொடரின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனில் ஒரு ஹீரோயினாக நடித்து அசத்தியவர் ராஷ்மி ஜெயராஜ்.தனது நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.இந்த சீரியலுக்கு பிறகுகு இவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கி வெற்றிநடை போட்டுவரும் ராஜபார்வை தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார்.சந்திரலேகா தொடரில் நடித்து பிரபலமான முன்னா இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.அனந்தி அஜய்,கீர்த்தி விஜய், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் 207 எபிசோடுகளுடன் சட்டென்று முடிக்கப்பட்டது.எந்த அறிவிப்பும் இன்றி இந்த தொடர் நிறைவடைந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.