தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான இயககுனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். 

மாநாடு திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, S.A.சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ள மாநாடு படத்தில் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடித்துள்ளார்.ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகளுக்கு செல்லவும் தடுப்பூசி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு.சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.