உலக பட்டினி தினத்தில் ஏழை மக்களின் பசியை போக்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்! வீடியோ இதோ

உலகப் பட்டினி தினத்தில் பசியை போக்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்,vijay makkal iyakkham members served food for poor in world hunger day | Galatta

சினிமாவில் நட்சத்திரமாகவும் பெரும் நடிகராகவும் மட்டும் இல்லாமல் மனிதநேயம் கொண்ட மனிதராகவும் மக்கள் மனதை நிறைய வைத்திருக்கிறார் தளபதி விஜய். அந்த வகையில் தளபதி விஜயின், விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தன்று பசியால் வாடும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இருக்கும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கியுள்ளனர். முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 234 தொகுதிகளிலும் தொகுதிகள் வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு மேல்படிப்புக்காக நிதி உதவி செய்ய தளபதி விஜய் திட்டமிட்டு இருக்கிறார் அதே போல் பெற்றோர்கள் இல்லாமல் படித்து பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவிகளுக்கும் நிதி உதவி செய்ய முடிவு எடுத்திருக்கிறார். விரைவில் இந்த விழாவில் சாதித்த மாணவர்களை நேரில் சந்தித்து  தளபதி விஜய் நிதி உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இது போல் ரத்த தானத்தை முன்னிறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடங்கிய தளபதி விஜய் குருதியகம் எனும் செயலியும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தாமாக முன்வந்து தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவளித்து வந்தனர். எனவே உடனடியாக அந்த நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்த தளபதி விஜய், இந்த விலையில்லா விருந்தகம் திட்டத்தை கைவிட வேண்டாம் என்றும் தொடர்ந்து செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டதாகவும், இதற்காக என்ன உதவி தேவைப்பட்டாலும் தான் உதவ இருப்பதாகும் உறுதி அளித்ததற்கு, மேலும் அடுத்தடுத்து பல மக்கள் நலத்திட்டங்களை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவை அனைத்திற்கும் இதே போன்று ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

அதன் ஒரு பகுதியாக உலக பட்டினி தனமான மே 28ஆம் தேதி பசியால் வாடும் ஏழை மக்களின் பசியை போக்கும் வகையில் அனைவருக்கும் உணவு வழங்க கோரிய தளபதி விஜயின் வேண்டுகோளுக்கிணங்க தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் எனும் திட்டத்தை மக்கள் இயக்கத்தினர் கையில் எடுத்தனர். அதன்படி சொன்னது போலவே மே 28ஆம் தேதியான இன்று, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு பசியை போக்கும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கியுள்ளனர். உலக பட்டினி தினத்தன்று பட்டினியால் வாடும் மக்களின் பசியை போக்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினரால் உணவு வழங்கப்பட்ட வீடியோக்களின் ஒரு தொகுப்பாக ஒரு வீடியோ நமது கலாட்டா சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

ஹிப் ஹாப் தமிழா ஆதியின்
சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "வீரன்" திருவிழா கொண்டாட்டம்... சர்ப்ரைஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

சினிமா

"தமிழன்டா" எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... காரணம் என்ன? விவரம் இதோ!

சினிமா

"அஞ்சலியின் 50வது படம்!"- ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!