செல்ல மகனுக்கு செம்ம பெயர் வைத்த விஜய் டிவி பிரபலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

மகனின் பெயரை வெளியிட்ட சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா,super singer ajay krishna named his baby boy as ayaan jaden prathimma jessy | Galatta

ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே விஜய் டிவியின் மீது ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். அந்த வகையில் நீண்ட காலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். விஜய் தொலைக்காட்சியின் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த நவம்பர் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது. நல்ல நல்ல திறமைகளை தேர்ந்தெடுத்து உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இருந்து எக்கச்சக்கமான பாடகர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமாக தமிழ் திரை இசை உலகில் பாடகர்களாக நுழைந்தனர். அந்த வகையில் நிகில் மேத்யூ, அனிதா, அஜீஷ், சாய்சரண், சத்திய பிரகாஷ், மாளவிகா, சந்தோஷ், திவாகர், ஆனந்த் அரவிந்தாக்ஷன் பிரியங்கா, ஹரிப்ரியா,சவுந்தர்யா, ரக்ஷிதா, ஸ்ரீகாந்த், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, ஷாம் விஷால், ரோஷினி உள்ளிட்ட பலர் தற்போது தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வருகின்றனர்.

அந்த வகையில் தனக்கென தனி ஸ்டைலில் சூப்பர் சிங்கர் மூலமாக தமிழ் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமடைந்தவர் பாடகர் அஜய் கிருஷ்ணா. குறிப்பாக பாடகர் உதித் நாராயணன் போல அச்சு அசலாக அதே குரலில் பாடும் திறமை கொண்ட அஜய் கிருஷ்ணா அந்த வகையில் பாடக்கூடிய ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. உதித் நாராயணன் பாடிய பாடல்கள் மட்டுமல்லாது மற்ற பாடகர்கள் பாடிய பாடல்களை கூட உதித் நாராயணன் குரலில் பாடி அசத்துபவர் அஜய் கிருஷ்ணா. முன்னதாக தனது நீண்ட நாள் காதலியான பிரதிம்மா ஜெஸ்ஸியை கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் அஜய் கிருஷ்ணா திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து தங்களது புதிய வாழ்க்கையை தொடங்கிய அஜய் கிருஷ்ணா - பிரதிம்மா ஜெஸ்ஸி ஜோடி விரைவில் பெற்றோர்களாக அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதை அறிவித்தனர். 

இதையடுத்து கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி  தற்போது பாடகர் அஜய் கிருஷ்ணா - பிரதிம்மா ஜெஸ்ஸி தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிப்ரவரி 12ஆம் தேதி எங்களுடைய மகன் பிறந்ததிலிருந்து அதிகாரப்பூர்வமாக நாங்கள் பெற்றோர்கள் ஆகியிருக்கிறோம். எங்கள் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் எக்கச்சக்கமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் நிறைய அன்பை எங்களை ஒரு குடும்பமாக மாற்றிய எங்களது குட்டி மனிதன் மீதும், காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டு பதிவிட்டனர். இந்நிலையில் தற்போது இவர்களது செல்ல மகனுக்கு "ஐயான் ஜேடன்" என பெயரிட்டுள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது குழந்தையோடு எடுத்துக் கொண்ட அட்டகாசமான புகைப்படங்களின் தொகுப்பாக ஒரு வீடியோவை அஜய் கிருஷ்ணா மற்றும் பிரத்திமா ஜெஸ்ஸி இருவரும் பகிர்ந்து உள்ளனர். சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் அந்த வீடியோ இதோ…
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jessy Ajay✨ (@prathimma_jessy)

சினிமா

"தமிழன்டா" எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... காரணம் என்ன? விவரம் இதோ!

சினிமா

"அஞ்சலியின் 50வது படம்!"- ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

கேன்ஸ் திரைப்பட விழாவில் காதல் மனைவியோடு கிளாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்!
சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில் காதல் மனைவியோடு கிளாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்!