தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.சில புதிய தொடர்கள் ஒளிபபரப்பட்டாலும்,பழைய தொடர்களும் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சந்திரலேகா.கடந்த 2014 முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.2000 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் சபரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்த அருண் ராஜன் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இவருக்கு பதிலாக தற்போது பிரபல சீரியல் நடிகர் அஸ்வின்குமார் புதிய சபரியாக இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அஸ்வின் வரும் எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கவுள்ளன.