தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த டான் திரைப்படம் கடைசியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர் நடித்துள்ள ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை தொடர்ந்து மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்திகேயன்.

இதனை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை தவிர மேலும் சில படங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.அடுத்ததாக ஏ ஜி எஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

இதனை ப்ரின்ஸ் பட விழாவில் சிவகார்த்திகேயன் உறுதி செய்தார்.நேற்று ட்விட்டரில் சில கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் சிவகார்த்திகேயன் அப்போது வெங்கட் பிரபு நமது பட ஷூட்டிங் எப்போது ஆரம்பம் என கேட்க , சிவகார்த்திகேயன் கதை சொல்லிட்டீங்கன்னா சீக்கிரமே ஆரம்பிச்சுரலாம் என கூறினார்.உடனே எப்போ ஷூட்டிங் பிளான் பண்றீங்க என அர்ச்சனா கல்பாத்தி கேட்க ரசிகர்கள் சீக்கிரம் ஆரம்பிங்கப்பா என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.படத்தின் அறிவிப்பு வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.