90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா.பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்ட இவர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் குடியேறி வாழ்ந்து வந்தார்.

ரம்பாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.அனைவரும் உற்சாகமாக வாழ்த்து வந்துள்ளனர்.தற்போது ஒரு சோக சம்பவம் இவரது வாழ்க்கையில் நடைபெற்றுள்ளது.ரம்பா தனது மகள்களை பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்து கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு கார் ஒன்று ரம்பாவின் கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் ரம்பா,அவரது மகள்கள் இருவர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பாளர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர் அவரகள் பெரிய அடியின்றி சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.

ரம்பாவின் மகள் ஷாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரம்பா தனது மகள் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை பண்ணுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.பல ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து அவர் விரைவில் குணமடைய வேண்டி வருகின்றனர்.