தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அசத்தி வந்தவர் பிரபாஸ்.பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.

அடுத்ததாக ராதே ஷ்யாம்,சலார்,ஆதிபுருஷ்,ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பிரபாஸ்.இதனை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் 25ஆவது படமான ஸ்பிரிட் படத்தினை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.ராதே ஷ்யாம் படம் வரும் மார்ச் 11ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

சலார் படத்தினை கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார்.homable films இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படமும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேஜி எப் இயக்குனருடன் பிரபாஸ் இணைவதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்,ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார்.தற்போது இந்த படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் நடித்துள்ளார் என்ற தகவலை பிரபாஸ் ராதே ஷ்யாம் கேரளா பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துள்ளார்.அவரது வேடம் எப்படி இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.