இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இன்று செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தயாரித்துள்ளன.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரமிப்பின் உச்சமாக ரசிகர்களை பிரம்மிக்க வைக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்த அசாத்திய படைப்பை ரசிகர்கள் ரசிக்கும் படியாக மெருகேற்றியுள்ளன.

எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின், சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே டிக்கெட்டுகள் முன்பதிவு பொன்னியின் செல்வன் திரைப்படம் பல புதிய சாதனைகளை படைத்துள்ள நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் திரைப்படத்தின் மீது மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இன்று செப்டம்பர் 30ஆம் தேதி அதிகாலை முதல் காட்சியிலிருந்தே படத்திற்கான நல்ல விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களோடு படம் பார்த்து ரசித்துள்ளனர். அந்தவகையில் நடிகர் ஜெயம் ரவி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்களோடு பொன்னியின் செல்வன் படம் பார்க்க வீடியோ இதோ…