தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த திரை உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதனையடுத்து தனது 2-வது திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்த மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கர்ணன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானதோடு விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்கவுள்ளார். இதனிடையே இயக்குனர்  செல்வராஜ் இயக்கத்தில் 3-வது படமாக தயாராகியுள்ள திரைப்படம் மாமன்னன்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தயாரித்து நடிக்கும் மன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் மாமன்னன் படத்திற்கு செல்வா. RK படத்தொகுப்பு செய்கிறார்.மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், “நான் மிகவும் எதிர்பார்த்த நாட்கள் கடைசியில் வந்துவிட்டன... இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் கைகோர்த்து இருக்கிறேன்” என குறிப்பிட்டு மாமன்னன் திரைப்படத்தின் இசை பணிகளில் ஈடுபட்டு இருப்பதை தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜின் அந்த பதிவு இதோ…
 

My most awaited days have finally come to light! Mamannan has made this happen!
Joining hands with the Isai Puyal ⁦⁦@arrahman⁩ sir himself!
Thanku ⁦⁦@Udhaystalin⁩ sir ⁦@RedGiantMovies_⁩ ⁦ #mamannan 2023⁦⁦ pic.twitter.com/D98NRP1L6l

— Mari Selvaraj (@mari_selvaraj) October 22, 2022