"கேள்வியே தப்பு..!"- "காக்கா - கழுகு" சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு கார்த்திக் சுப்பராஜின் தரமான பதில்! வைரல் வீடியோ

காக்கா - கழுகு சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு கார்த்திக் சுப்பராஜின் பதில்,karthik subbaraj about kaakka kazhugu controversy | Galatta

சமீப காலமாக சோசியல் மீடியாவில் "காக்கா - கழுகு" என்ற ஒரு டெம்ப்ளேட்டை வைத்துக் கொண்டு இரு பெரும் நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தனது திரைப் பயணம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் பேசும் போது ஒரு முறை சொல்லி இருந்தார். “நான் இவ்வளவு வெற்றிகரமாக இருக்கிறேன் என்றால் அதற்கு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் ஷங்கர், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ஒரு காரணமாக இருக்கிறார்.” என சொல்லி இருக்கிறார். அதேபோல் மற்றொரு பெரிய ஹீரோ “என்னுடைய வெற்றிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் நெல்சன் ஆகியோர் எல்லாம் காரணமாக இருக்கிறார்கள்” என சொல்கிறார். இந்த மாதிரி ஒரு நன்மதிப்பில் இருக்கக்கூடிய இயக்குனராக நீங்கள் இருக்கிறீர்கள் இது உங்களுக்கு எப்படி இருக்கிறது? இன்னும் நன்றாக படங்கள் பண்ண வேண்டுமே என இது உங்களுக்கு ஏதாவது அழுத்தமாக இருக்கிறதா?” என கேட்டபோது, 

“இல்லை தலைவர் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) என் பெயரை சொன்னபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி ஒரு லெஜன்ட் சூப்பர் ஸ்டார் எத்தனையோ படங்கள் செய்துவிட்டார். அதில் குறிப்பிட்டு என்னை சொன்னால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதெல்லாம் பேட்ட திரைப்படத்தால் தான் அவருக்கு பேட்ட மிகவும் பிடித்தது ரசிகர்களுக்கும் பிடித்தது என்பதால் தான். அதனால் எந்த அழுத்தமும் இல்லை இது சந்தோஷமான விஷயம் தான்." என்றார். தொடர்ந்து அவரிடம், "இது ஒரு புறம் இருக்க, நீங்கள் சமூக வலைதளங்களில் இந்த கழுகு - காக்கா விஷயத்தை பார்க்கிறீர்களா அதை இப்போது ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்” எனக் கேட்டபோது, “என்னை பொருத்தவரையில் இந்த ரசிகர்களின் போர் வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் எல்லோரும் தலைசிறந்த நடிகர்கள். எல்லாருடைய படங்களையும் நாம் கொண்டாடுகிறோம் படங்களை கொண்டாடத்தான் முடியும். ஒரு படம் பார்க்கப் போகும்போது ஒரு நல்ல மனநிலையில் தான் போகிறோம். நம் அனைவருக்கும் ஒரு நல்ல நேரம் இருக்கிறது அந்த நேரத்தை கொஞ்சம் ஜாலியாகவோ ஏதாவது ஒரு விதத்தில் நகர்த்த தான் சினிமாவிற்கு போகிறோம். அதற்குள் சண்டை போடுவதற்கே நான் போகவில்லையே... அதனால் அதை கண்டு கொள்வதுமில்லை பின் தொடர்வதுமில்லை. கேள்வியே தப்பு” என பதில் அளித்தார்.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முதல் முறை ராகவா லாரன்ஸ் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருக்கும் ஜிகர்தண்டா DOUBLEX திரைப்படம் வருகிற நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த ஜிகர்தண்டா DOUBLEX திரைப்படம் குறித்தும், தளபதி விஜய்க்கு கதை சொன்ன அனுபவம் , காக்கா கழுகு சர்ச்சை உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கை காணலாம்.