விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது.ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்தார் ஆல்யா.ஒரு சிறிய இடைவேளைக்கு பின் ராஜா ராணி 2 தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.இந்த தொடரில் சித்து ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி தொடரில் நடித்து வந்தார் அந்த தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.இதனை தொடர்ந்து சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பை தொடங்கியுள்ள கயல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்பமாக இருக்கிறார் என்பதை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.இருந்தாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார்.இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஆல்யா தொடரில் இருந்து விலகுவது குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.சீரியலில் இருந்து நிச்சயம் விலகப்போவதில்லை சந்தியா நான் மட்டும் தான் என்று உறுதியளித்துள்ளார்.

alya manasa denies quitting raja rani 2 serial due to pregnancy sanjeev