காரை விட்டு இறங்கி திடீரென ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜெயம் ரவி... ட்ரெண்டாகும் ஸ்பெஷல் பேட்டி இதோ!

காரை விட்டு இறங்கி திடீரென ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜெயம் ரவி,jeyam ravi met his fans at roadside shop galatta special interview | Galatta

நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்த நடிகர் ஜெயம் ரவி காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென இறங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து அனைத்து சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர். அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான நல்ல கதை களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த அடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக தயாராகும் ஜீனி திரைப்படத்தில் தற்போது ஜெயம் ரவி நடித்து வருகிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி உடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், க்ரீத்தி ஷெட்டி, வமிக்கா கேபி ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் திரில்லர் திரைப்படமான சைரன் திரைப்படத்தை வருகிற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அடுத்ததாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பக்கா காமெடி என்டர்டைனர் ட்ரீட் படங்கள் கொடுத்த இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ஜெயம் ரவியின் அடுத்த படமாக இறைவன் திரைப்படம் நாளை செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. வாமணன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் I.அகமத் இயக்கத்தில் பக்கா சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருக்கும் இறைவன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு கார் ஓட்டியபடியே காரில் பிரத்தியேக பேட்டி கொடுத்த நடிகர் ஜெயம் ரவி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் காரில் சென்றபடியே நமது கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து வந்த நடிகர் ஜெயம் ரவி திடீரென சாலை விபத்தில் இறங்கி இளநீர் சாப்பிடலாமா? என ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கிய ஜெயம் ரவி அங்கிருந்து பொதுமக்களை சந்தித்து பேசினார். மேலும் அவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டு, இளநீர் சாப்பிட்ட பின்னர் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் அவரோடு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின்னர் அங்கிருந்து கிளம்பினார். தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து கொண்டு பெரிய பாதுகாப்பு ஏதும் இன்றி சகஜமாக சாலையோரத்தில் இருந்த இளநீர் கடையில் இறங்கி ரசிகர்களோடு ஜாலியாக பேசி புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட நடிகர் ஜெயம் ரவியின் இந்த ஸ்பெஷல் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.