"என் உயிர்.. என் உலக்"- மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா! ட்ரெண்டாகும் க்யூட்டான புகைப்படங்கள்

மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா,vignesh shivan nayanthara sons uyir and ulag first birthday photos | Galatta

தங்களது செல்ல மகன்களான உயிர் மற்றும் உலக் இருவரின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அவர்களது அவர்களின் புகைப்படங்களை முதல்முறையாக பகிர்ந்து உள்ளனர். நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தனது 2வது படமாக நடிகர் தனுஷ் தயாரிப்பில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடிக்க, வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன், தொடர்ந்து சூர்யா உடன் இணைந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த (2022) ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. 

அடுத்ததாக ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக்கும் புதிய படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அத்திரைப்படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே தங்களது செல்ல மகன்களின் பிறந்தநாளை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தற்போது கொண்டாடியுள்ளனர். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகினர். இந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் உயிர் - உலகம் என குறிப்பிட்டு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டனர். 

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அவ்வப்போது தனது குழந்தைகளோடு நடிகை நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது செல்ல மகன்களின் முதல் பிறந்தநாளில் முதல்முறையாக அவர்களது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.  மேலும் அந்த பதிவில், “  ‘என் முகம் கொண்ட என் உயிர் என் குணம் கொண்ட என் உலக்’ இந்த வரிகளை பதிவிடுவதற்காகவும் எனது அன்பான மகன்களின் புகைப்படங்களை பதிவிடுவதற்காகவும் நீண்ட காலமாக காத்திருந்தேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகன்களே உயிர் ருத்ரோநீல் உலக் தெய்விக். அம்மாவும் அப்பாவும் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இந்த வாழ்க்கையில் எதையும் மற்றும் எல்லாவற்றையும் தாண்டி... எங்கள் வாழ்க்கைக்குள் வந்ததற்கும் இதை மிகவும் அழகாக மாற்றியதற்கும் உங்கள் இருவருக்கும் நன்றி. எல்லா பாசிட்டிவிட்டிகளையும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். இந்த 1 முழு ஆண்டு வாழ்நாள் முழுவதும் ரசிக்க வேண்டிய தருணங்களால் நிரம்பியுள்ளது. LOVE YOU 2 ! நீங்கள் எங்கள் உலகம் & எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் அந்த க்யூட்டான புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)