சென்னையில் மாடலிங் மன்மதன் ஒருவன், 20 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியதாக அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், “பெரிய இடத்து பெண்கள் மற்றும் பெண் தொழில் அதிபர்கள் பலரும் கட்டு மஸ்தான உடம்பை பார்த்து என் கட்டிலுக்கு வந்துள்ளனர்” என்று, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் 26 வயதான முகமது சையது என்பவர், மாடலிங் துறையில் வளர்ந்து வரும் கலைஞனாக இருந்து வந்த நிலையில், “நம்ம சென்னை” என்ற பெயரில், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வந்திருக்கிறார்.

அதே நேரத்தில், ஜிம்முக்கு சென்று தனது உடலை 6 பேக் கொண்டு, மெருகேற்றியும் அவர் மிடுக்கான உடல் கட்டுடன், போட்டோக்களை எடுத்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் சேர் செய்து வந்திருக்கிறார். இதனால், சோசியல் மீடியாவில் பல பெண்களும், இவரிடம் பேச அதிகம் ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், “நம்ம சென்னை” என்ற பெயரில், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்திய போது, 3 இளம் பெண்கள் இவருக்கு பழக்கம் ஆன நிலையில், அந்த 3 இளம் பெண்களிடமும் தொடர்ந்து பேசி வந்த இந்த மாடலிங் மன்மதன், அவர்களை தனது காதல் வலையில் ஒரே நேரத்தில் வீழ்த்தி இருக்கிறார். 

இதனால், அவர்கள் 3 பேரையும் நம்ம வைத்து, 3 இளம் பெண்களையும் அவர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அந்த 3 இளம் பெண்களில் ஒருவர், எதார்த்தமாக இந்த மாடலிங் மன்மதனின் செல்போனை பார்த்திருக்கிறார். அப்போது, தன்னிடம் சாட்டிங் செய்வது போலவே மற்ற பெண்களிடமும் சாட்டிங் செய்ததை அவர் கண்டுப்பிடித்திருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், அந்த போனில் உள்ள மற்ற இளம் பெண்களின் சொல்போன் நம்பரை நோட் பண்ணிக்கொண்ட அந்த பெண், அவரகளை தனியாக தொடர்புகொண்டு தான் ஏமார்ந்த விசயத்தையும், அந்த மாடலிங் மன்மதனின் மன்மத லீலைகள் பற்றியும் கூறி, உண்மையை புரிய வைத்திருக்கிறார். இதனால், அந்த இரு இளம் பெண்களும் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதனையடுத்து, இந்த 3 பெண்களும் சேர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த மாடலிங் மன்மதன் மீது பாலியல் புகார் அளித்த நிலையில், இந்த குற்றச்சாட்டை உறுதி செய்துகொண்ட போலீசார், அந்த மாடலிங் மன்தமனை தட்டி தூக்கி அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, போலீசார் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், “இவன் 40 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம்” என்று, போலீசார் சந்தேகத்து உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில், “கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலமாக கிட்டதட்ட ஓட்டல்களில் 100 அறைகளை முன்பதிவு செய்து, இளம் பெண்களுடன் நெருக்கமாக இருந்து உள்ளேன்” என்று, கூறி, போலீசாரையே அதிர வைத்து உள்ளான். 

குறிப்பாக, “எனது கட்டு மஸ்தான உடம்பை பார்த்து, அதில் மயங்கி பல தொழிலதிபர்களின் மகள்கள் மற்றும் பெரிய இடத்து பெண்கள் பலரும் என் வலையில் விழுந்து உள்ளனர் என்றும், அவர்களை அரை நிர்வாணமாக படம் எடுத்து, துபாய் உள்ளிட்ட சில வெளி நாடுகளுக்கும் நான் இளம் பெண்களை அழைத்துச் சென்று உள்ளேன்” என்றும், வாக்குமூலம் அளித்து, போலீசாரையே அதிர வைத்து உள்ளான்.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட இளம் பெண்களிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தொழிலதிபர்களின் மகள்கள் மற்றும் பெண் தொழில் அதிபர்கள் என்பதால், போலீசார் மிக கவனமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.