தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது விடாமுயற்சியால் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிலம்பரசன்.நடிப்பு,டான்ஸ்,இயக்குனர்,பாடலாசிரியர்,தயாரிப்பாளர்,பாடகர் என சினிமாவின் அனைத்து பரிமாணங்களையும் அறிந்த பன்முகக்கலைஞராக திகழ்பவர் சிம்பு.இளம் வயதிலேயே பெரும் புகழையும் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் சிம்பு பெற்றிருந்தார்.

எவ்வளவு புகழ் வந்ததோ அதே அளவு சர்ச்சைகளை சந்தித்த ஒரே நடிகர் சிம்பு மட்டும்தான்.இடையில் சில காரணங்களால் ஒரு படத்தின் ஷூடிட்ங்கிற்கு சரியாக வரவில்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பித்து Redcard பல குற்றச்சாட்டுகளை சிம்பு மீது சுமத்தி வந்தனர்.சிம்புவும் அதற்கு ஏற்றார் போல உடலெடை கூடியது என்று இருக்க அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

அவ்வளவு தான் சிம்பு என்று பலரும் பேசி வந்த வேளையில் விமர்சனங்களை உடைத்தெறிந்து ரசிகர்கள் காட்டிய அன்பிற்காக மீண்டு புது அவதாரத்தில் வந்தார் சிம்பு.சில காரணங்களால் இடையில் சில சலசலப்புகளை சந்திக்க நேர்ந்தது என்றும் இனி அப்படி ஒருபோதும் இருக்காது என்றும் சிம்பு வாக்குறுதி அளித்தார்.அதேபோல ஈஸ்வரன்,மாநாடு என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து அசத்தினார்.

அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் சிம்பு பங்கேற்று முடித்தார்.இந்த படப்பிடிப்பில் மீண்டும் Redcard பிரச்சனை கிளம்பி Fefsi ஊழியர்கள் ஒத்துழைப்பு பிரச்சனை என்று பல பிரச்சனைகள் வெடித்தது பிரச்சனைகளை முடித்து ஷூட்டிங்குகளை சுமூகமாக நடத்த சிம்பு தரப்பினர் வேலைகளை தொடங்கினர்.

இருதரப்பிடையே சுமூக பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சிம்புவிற்கு விதிக்கப்பட்ட Redcardடை தயாரிப்பாளர் சங்கம் திரும்ப பெற்று கொண்டனர்.அதோடு Fefsiயும் தங்கள் ஒத்துழைப்பை சிம்பு படத்தின் ஷூட்டிங்கிற்கு தருவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து இனி சிம்பு படத்தின் ஷூட்டிங் எந்த தடையும் இன்றி நடைபெறும் என்று ரசிகர்கள் நிம்மதியில் உள்ளனர்.