சின்னத்திரை ஷூட்டிங்குகள் எப்போது தொடங்கப்படும் ? - ஆர்.கே.செல்வமணி விளக்கம் !
By Aravind Selvam | Galatta | July 01, 2020 16:51 PM IST
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்
கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் ஜூன் 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டு சினிமா,சின்னத்திரை,சீரியல் வேலைகள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.ஜூலை 5 வரை இந்த தீவிர ஊரடங்கு தொடரும் என்றும் அரசு அறிவித்துள்ளனர்.ஜூலை 6ஆம் தேதி முதல் கடந்தமுறை அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சின்னத்திரை ஷூட்டிங்குகள் என்று எதிர்பார்த்து பல தயாரிப்பாளர்களும்,தொழில்நுட்ப கலைஞர்களும் தன்னை தொடர்புகொண்டதாக FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.தன்னிடம் பலரும் போன் செய்து ஷூட்டிங்குகள் எப்போது தொடங்கும் என்று கேட்டுவருவதாகவும்,அரசு ஜூலை 6ஆம் தேதி முதல் தளர்வுகளை அறிவித்துள்ளது அதனை தொடர்ந்து ஜூலை 8ஆம் தேதி முதல சின்னத்திரை சம்மந்தமான சீரியல்,விளம்பர படங்கள் உள்ளிட்ட ஷூட்டிங்குகள் தொடங்கலாம் என்று FEFSI முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
New trailer from controversial Shraddha Srinath movie
01/07/2020 06:59 PM
SAC releases new video - shares an important message to fans!
01/07/2020 06:39 PM
Cobra director on working with Vijay and Ajith Kumar | Next film plans
01/07/2020 06:11 PM