தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த நடிகராக படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களையும் நல்ல கதைக் களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா முதல்முறையாக இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த நடிகர் சூர்யா சமீபத்தில் படத்தில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இதனிடையே தனது 42 ஆவது திரைப்படமாக தயாராகும் பிரம்மாண்டமான படத்தில் தற்போது சூர்யா நடித்த வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 42 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டனி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லீ, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

3D தொழில் நுட்பத்தில் தயாராகும் பிரம்மாண்டமான சூர்யா 42 திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் UV கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. வெற்றி ஒளிப்பதிவில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் சூர்யா 42 திரைப்படத்தை பத்து மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் தற்போது தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்து படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய நடிகர் சூர்யா, காரில் செல்லும்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களை கவனித்து, காரில் இருந்து இறங்கி வந்து, "இப்போது படப்பிடிப்பு முடிந்தது… இரண்டு மாதம் கழித்து மீண்டும் வருகிறேன்" என அவர்களிடம் சொல்லிவிட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

2 மாசம் கழிச்சு வரேன் ! Shooting spot-ல் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பிய @Suriya_offl 👈🎞️#Suriya #Suriya𓃵 #Suriya42 #ViralVideo pic.twitter.com/xMplG9HVhQ

— Galatta Media (@galattadotcom) December 23, 2022