காதலுடன் ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்த சரண்யா !
By Aravind Selvam | Galatta | June 01, 2020 11:26 AM IST
செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.
மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.தனது காதலனுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை சரண்யா பகிர்ந்துள்ளார்.இந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.