செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். மார்ச் 5ம் தேதியான இன்று வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதை களத்தை கொண்ட படமென்பதால் 4 ட்ரைலர்களும் பார்க்கும் போதெல்லாம் எதிர்பார்ப்பை கிளப்பி கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி யுவனின் இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பணக்கார தம்பதியினரான எஸ்.ஜே.சூர்யா - நந்திதாவின் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பணிக்கு வருகிறார் ரெஜினா. அப்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஜினா மீது ஆசை வருகிறது. அதற்கான முயற்சியின் போது ரெஜினா மிகவும் கோபமடைகிறார். ஒரு கட்டத்தில் அவரை கற்பழித்துக் கொலை செய்துவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. அதற்குப் பிறகு என்னவாகிறது என்பதே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் திரைக்கதை.

இந்நிலையில் படத்தின் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா பாடிய இந்த பாடல் வரிகளை செல்வராகவன் எழுதியுள்ளார். 

எஸ்.ஜே.சூர்யா கைவசம் மாநாடு திரைப்படம் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.