விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் தினமும் மோதல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மேலும் இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே சில போட்டியாளர்கள் மட்டும் குழுவாக பிரிந்து செயல்படுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்து வந்தது. 

அந்த வகையில் வாரம் முழுவதும் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்க்கிலும் கூட பலரும் தங்கள் மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்தினார்கள். அதிலும் குறிப்பாக ஆரி நேற்று ஷிவானியிடம், பாலாஜிக்கும் உங்களுக்கும் இடையே இருப்பது நட்பா அல்லது காதலா என்று நேரடியாகவே கேட்டு விட்டார். அதற்கு அவரும் எங்கள் இருவருக்கும் உள்ளே இருப்பது நட்பு தான் என்றும் தெளிவுபடுத்தினார். ஆனால் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அவ்வாறு தோன்றவில்லை என்பது வேறு விஷயம்.

உலக நாயகன் கமல் போட்டியாளர்கள் முன்பு தோன்றி இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். வழக்கமாக நிகழ்ச்சி தொடங்கியதும் ஏதேனும் அரசியல் குறித்து பேசும் கமல் இன்று நிவர் புயல் குறித்தும் அந்தப் புயலிலும் இருந்து மக்களைக் காக்க போராடிய அனைத்து செயல்வீரர்கள் குறித்தும் பாராட்டினார்.

அதை தொடர்ந்து போட்டியாளர்கள் முன்பு நாமினேஷன் topple கார்டு குறித்து பேசினார். அப்போது அதில் பங்கேற்ற ஆண்களான ஆரி, பாலாஜி, சோம் மற்றும் ரமேஷிடம் இதில் ஆரம்பத்திலிருந்தே நீங்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் விளையாடதற்கு காரணம் என்ன என்று கேட்டார். மேலும் அதில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தமைக்கு சனமை பாராட்டிய கமல் நிஷாவிடம் நீங்கள் எதற்காக உணர்ச்சிவசபட்டிர்கள் என்றும் கேட்டார்.

அதை தொடர்ந்து கோர்ட் ரூம் சம்பவம் குறித்து பேசும்போது நாங்கள் இருவரும் எந்த விஷயத்தையும் பரிமாறிக் கொண்டு அங்கு பேசவில்லை என்றும் எனது மனதில் இருந்ததையே பேசியதாக ரியோ விளக்கம் அளித்தார். மேலும் என்னுடைய கேமை நான் தனி ஆளாகவே விளையாடி வருவதாகவும் யாருடைய துணையும் நான் இங்கு எதிர்பார்க்க வில்லை என்பதையும் ரியோ தெரிவித்தார். நிஷா அக்கா எல்லாரிடமும் அன்பாக பேசி பழகுவதாகவும் ஆனால் என்னிடத்தில் சற்று அதிகமாக நெருங்கிப் பழகுவதாக தெரிவித்தார். 

வெளியில் உங்கள் மீது இருக்கும் தோற்றம் குறித்து அதிகமாக சிந்தித்து விளையாடினால் உங்களது கேமை இங்கே இழக்க நேரிடும் என்பதை மனதில் நினைத்து விளையாடுங்கள் என்று ரியோவிற்கும் அட்வைஸ் மழை பொழிந்தார் உலகநாயகன். 

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், சம்யுக்தாவை கேள்வி எழுப்பிய கமல், ஆரி குறித்து பேசினார். இந்த முறை குறும்படமும் இல்லை... அர்ச்சனா சொல்வது போல் குருமா படமும் இல்லை... படம் என்று கூறுகிறார்.  யார் மீது தவறு... யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.