பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தின் 5 நாட்கள் போட்டியாளர்களின் ஆட்சி நடந்தாலும், வாரத்தின் இரண்டு நாட்கள் கமல்ஹாசன் ஆட்சி தான். வாரம் முழுக்க போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியும் அவருடைய வேலையை சிறப்பாக செய்து வருகிறார். நேற்றும் போட்டியாளர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

கமல் வந்ததும் வராததுமாக நேரத்தின் முக்கியத்துவத்தையும் அதை கணிப்பதை பற்றியும் பேச ஆரம்பித்தார். காலத்தை கணிக்க முயன்ற கணியர்களின் வெள்ளிக்கிழமை வாழ்க்கை எப்படி இருந்தது பார்க்கலாம் என மணிக்கூண்டு டாஸ்க்கினை பற்றி கூறி சென்றுவிட்டார். அதில் ஆரம்பித்ததுமே சாப்பாட்டு விஷயத்தில் அர்ச்சனா மற்றும் சோம் இடையே சின்னதாக சண்டை ஆரம்பித்து பெரியதாக வெடிப்பதற்கு முன்பே முடிந்துவிட்டது.

ஆரி மற்றும் அனிதா நள்ளிரவில் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் விவாதம் செய்வதை பார்த்தாலே அனிதா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களே என்றே தோன்றியது. இறுதியில் ஒரு வழியாக அனிதாவே போதும் என்ற முடிவுக்கு வந்து சமாதானம் ஆகினார். இப்படி வெள்ளிக்கிழமை காட்சிகளை குறுகிய நேரத்தில் காட்டிவிட்டு போட்டியாளர்களை சந்தித்து பேச ஆரம்பித்தார் கமல். தன்னுடைய கலைப் பயணத்தின் பழைய நினைவுகளில் எம்.ஜி.ஆர் பற்றியும் எம்,ஆர்.ராதா பற்றியும் பேசினார்.

அடுத்ததாக காலத்தை கணித்ததை பற்றி அர்ச்சனா, சோம், சம்யுக்தா, ஆரி, கேபி, ரியோ என நன்றாக விளையாடியவர்களை பாராட்டினார். அதில் சிரித்துக் கொண்டிருந்த பாலாஜியை சரி நல்லா வாங்க போறாரு என நினைக்கிறீங்களா என கேட்டுவிட்டு ஆமாம் அதுவும் தான் நடக்கப் போவது என்று அவரே பதிலும் கூறிக்கொண்டதைப் பார்த்து ரசிகர்கள் அப்படின்னா இன்று பாலாஜிக்கு சம்பவம் இருக்கு என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து பேசிய கமல் நான் சொல்லும் விமர்சனங்களையும், அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு தலை வாருவது, பொறுமை காப்பது என செயல்பட்டு வருகிறீர்கள் என பாலாஜி எதையும் செய்வதில்லை என்பதை மறைமுகமாக கூறி சிரிக்காமல் கிண்டலடித்தார்.

அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த பாலாஜியிடம், 3 மணி நேரத்தை 1 மணி 20 நிமிடத்தில் கணித்தது நீங்கள் தான் என்று கூறியதும், நேரத்தை சரிசெய்ய அவ்வாறு செய்தேன் என்று ஏதோ காரணங்களை கூறியும், நாங்கள் மூவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் என நான் மட்டும் ஏன் negative comments வாங்க வேண்டும் என நினைத்து ரம்யா, சுசித்ராவையும் கூட்டணி சேர்த்து கொண்டார் பாலாஜி.

அதை கேட்டுக் கொண்டிருந்த ரம்யா முதலில் தானும் உடந்தை தான் என சம்மதித்தாலும் அதன்பின் சரியாக கணிக்கலாம் என்று கூறினேன் என என் மீது எந்த தவறும் இல்லை அய்யா என்கிற மாதிரி நிரூபித்துக் கொண்டார். அதற்கு கமல் பாதி கிணறு தாண்டிய பிறகு யோசிக்க கூடாது. ஒன்று முழுமையாக தாண்ட வேண்டும் என்று உதாரணம் சொல்லி சுட்டிக்காட்டினார்.

அதை தொடர்ந்து பாலாஜியைப் பார்த்து நீங்கள் விதிகளை மீறாமலும், Game Spirit ஐ கெடுக்காமலும் இருந்தால் உங்கள் உடன் இருப்பவர்களுக்கும் சந்தோசமாக இருப்பார்கள். நீங்களும் முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்பாக அது இருக்கும் என கமல் அட்வைஸ் கொடுக்கின்ற சாக்கில் நோஸ்கட்டும் செய்தார். இதுவரை கமல் பலமுறை அறிவுரை கூறியும் ஒவ்வொரு போட்டியிலும் விதிகளை மீறி செயல்பட்டு லக்ஜுரி பட்ஜெட் கிடைக்காமலும் செய்திருந்தார் பாலாஜி.

இந்த முறை கமல் நேரடியாகவே சுட்டிக் காட்டியிருப்பதை கேட்டு பாலாஜி தன்னை திருத்திக் கொள்வாரா? என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம். இன்று வெளியான முதல் ப்ரோமோவிலும் பிக்பாஸ் வீட்டின் பங்களிப்பு குறித்து கேட்டறிந்தார் கமல்.