பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் வந்திருக்கிறார்கள். அதனால் இதற்கு முன்பு நடந்த டாஸ்க்குகளே மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. வார இறுதியில் பிக் பாஸ் 4 பிரம்மாண்ட finale விழா நடைபெற உள்ள நிலையில் தற்போதும் பல வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் இன்று போட்டியாளர்களுக்கு நாடா இல்லை காடா என்ற டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒரு அணியினர் சொர்க்கபுரி ராஜ குடும்பத்தினர் ஆகவும், மற்றொரு அணியினர் மாயபுரி அரக்க குடும்பத்தினர் ஆகவும் இருக்க வேண்டும். அரச குடும்பத்தினர் ஒவ்வொருவராக வெளியில் வந்து அசையாமல் இருக்க வேண்டுமென்றும் அரக்க குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அவர்களை சிரிக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் டாஸ்க்.

இந்த போட்டி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் ஜாலியாக விளையாடி இருப்பது தற்போது வெளிவந்திருக்கும் என்ற இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. 101வது நாளில் இப்படி ஒரு டாஸ்கை மீண்டும் வழங்கியிருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ப்ரோமோவில் ஆரி பேசிய வசனம் பிக்பாஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

இந்த போட்டி முதல்முறையாக நடைபெற்றபோது சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் செட்டி இடையே மிக மோசமான சண்டை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சனம் ஷெட்டியின் தலையில் கட்டையை வைத்து சுரேஷ் அடித்து விட்டார் என ஒரு பெரிய கலவரமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வாரம் மீதம் இருக்கும் நாட்களில் மேலும் என்னவெல்லாம் டாஸ்குகள் வழங்கப்படும் என பொருத்திருந்து பார்ப்போம். பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் யாருக்கு என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.