பிக் பாஸ் 4ல் இந்த வாரம் முந்தைய போட்டியாளர்கள் பலரும் மீண்டும் வீட்டுக்குள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். வீட்டுக்குள் இருப்பது 6 போட்டியாளர்கள் மட்டும் தான் என்றாலும் இதற்கு முன்பு எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அதிகம் பேர் மீண்டும் வீட்டுக்குள் வந்து இருக்கிறார்கள். முதல் நாள் அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் மட்டும் வந்த நிலையில் அதனை தொடர்ந்து ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.

இந்நிலையில் இன்று அனிதா சம்பத் பிக் பாஸுக்கு மீண்டும் வந்து இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவர் எலிமினேட் ஆனார், அதற்கு சில தினங்களுக்கு பின் அவரது அப்பா திடீர் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிதா சம்பத் மிகவும் எமோஷனலாக பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த நிலையில் மற்றவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி இருக்கிறார்கள். 

நாங்கள் இருக்கிறோம் என சொல்லி அவர்கள் அனைவரும் அனிதாவை தேற்றி இருக்கிறார்கள். அதன் பின் அவரை கைதட்டி பாராட்டி இருப்பதும் இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.. மொத்த பிக் பாஸ் வீடும் இதனால் அதிகம் எமோஷ்னல் ஆக தான் இருக்கிறது.

இந்த வாரம் பிக் பாஸ் 4 நிறைவுபெற உள்ள நிலையில் இதற்கு முன் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பெரும்பாலானார்கள் வந்திருக்கிறார்கள். அர்ச்சனா முதல் ஆஜித் அவர் பலரும் வீட்டுக்குள் திரும்பி வந்திருக்கிறார்கள். ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் வரவே இல்லை.

இது பற்றி ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார் சுரேஷ் சக்ரவர்த்தி. நான் மட்டும் தான் இதுவரை அழைக்கப்படாத ஒரே ஒரு போட்டியாளர் என கூறி இருக்கிறார். பைனலிஸ்ட்டுகளாக இருக்கும் 6 போட்டியாளர்கள் மற்றும் மீண்டும் சென்றிருக்கும் போட்டியாளர்களுக்கும் அவர் வாழ்த்து கூறி இருக்கிறார். உங்களுக்கு நான் டிவி முன் அமர்ந்து உற்சாகமூட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.