மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார். அந்த புகழ் அவரை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. செவிலியரான ஜூலிக்கு வீரத்தமிழச்சி என்ற பெயரையும் பெற்று தந்தது. அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நுழைந்தார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழு நேர நடிகையாகவும் மாறி விட்டார் ஜூலி. 

ஜூலிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இச்செய்தி உண்மையில்லை இதை யாரும் நம்பவேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வலியுறுத்தினார் ஜூலி. ஜூலி பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் பயோபிக் படம், அம்மன் தாயி படம் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடிகை ஜூலி நடித்துள்ளார். சமீபத்தில் உடல் முழுவதும் கருப்பு நிற மை பூசிக் கொண்டு படு பயங்கரமான போட்டோஷூட்டை நடத்தினார் ஜூலி. Black Lives Matterக்கு ஆதரவாக தனது சிறு முயற்சி என்றும், நிறத்திற்காக ஒரு மனிதரை வெறுப்பது என்பது கொடுமையான செயல், கருப்பும் ஒரு நிறம் தான் என்றும், கருப்பின மக்களுக்காக தன்னால் முடிந்த ஒரு சிறு செயல் இது என்றும் கேப்ஷன் செய்திருந்தார். 

இந்நிலையில், ஜூலியின் புதிய பீச் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடற்கரையில் மணலை வைத்து தன் உடலை மூடியபடி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும். பட ஸ்டில். சஸ்பென்ஸ் மற்றும் சர்பிரைஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஜூலி. இதனால் புதிய படத்திற்காக இந்த போட்டோஷூட்டை செய்துள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். 

ஒரு சில ரசிகர்கள் போல்டான புகைப்படம் என்று கமெண்ட் செய்தாலும், ஏன் இந்த கவர்ச்சி என்று கேள்வி கேட்டு வருகின்றனர். மெரினாவில் போராட்டத்தில் கலந்து கொண்ட வீர தமிழச்சி எங்கே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.