பெண்களும் பைக் ரேஸிங் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் அலிஷா அப்துல்லா. பிரபல பைக் ரேஸர் அலிஷா இரும்புத் திரை படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தும் பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அலிஷா அப்துல்லா சமூக வலைத்தளங்களில் திரைப்பிரபலங்கள் பற்றியும், தனது ரேஸிங் தொழில் பற்றியும் அடிக்கடி பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

சமீபத்தில் அலிஷா அப்துல்லாவுக்கு National Human Rights Anti Crime and Anti Corruption Bureau என்ற அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக ஆக நியமிக்கப்பட்டார். அதன் அடையாள அட்டையும் சமூக வலைத்தளங்களில் அலிஷா அப்துல்லா பகிர்ந்திருந்தார். இதனால் தனக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு அதிக வாழ்த்துக்கள் குவிந்தது. அது மட்டுமின்றி அவரைப் பற்றி ஒரு வதந்தி ஒன்றும் பரவியது. இந்த பதவி கிடைத்ததும் அலிஷா அப்துல்லா நேராக அஜித்தின் வீட்டிற்கு சென்று இந்த பதவி கிடைக்க நீங்கள் தான் காரணம் என கூறியதாகவும், அஜித்திடம் ஆசிர்வாதம் வாங்கியதாகவும் என வதந்தி பரவியது. இந்த விஷயத்தை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியது. 

இதனை பார்த்த அலிஷா அப்துல்லா கோபத்துடன் பதிலடி தந்துள்ளார். இது போன்ற நான்சென்ஸை நான் பொறுத்து கொள்ள மாட்டேன். எப்படி அவர் இதுபோன்று பேசலாம். என்னைப் பற்றி வதந்தி பரப்பியது மட்டுமில்லாமல் அஜித் சார் போன்ற மிகப் பெரிய ஸ்டார்களின் பெயர்களையும் இவர் கெடுக்கிறார். இது போன்று மற்றவர்களின் பெயர்களை கெடுக்காதீர்கள். வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள் என பதிவு செய்துள்ளார் அலிஷா. இதன் மூலம் அலிஷா அப்துல்லா இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது அரசு பதவி அல்ல என்றும் இது ஒரு என்ஜிஓ என்றும் அலிஷா இதற்கு முன்பே விளக்கம் அளித்திருந்தார். அரசு பதவியையோ அல்லது NGO பதவியோ எதுவாக இருந்தாலும் அதில் வித்தியாசமில்லை .மக்களது வாழ்க்கையில் நாம் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். ஆனால் என்னை உலகத்தை மாற்ற முடியாது. ஆனால் என்னால் முடிந்த அளவு விஷயங்களை செய்வேன். சரியான விஷயங்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என அவர் தெரிவித்திருந்தார். 

எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது கொரோனா லாக் டவுன் நேரத்தில் தன்னுடைய அமைப்பு மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமீபத்தில் மளிகை பொருட்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.