கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சீரியல் ஒளிபரப்பில் முக்கிய பங்கு வகிப்பது சன் டிவி தான்,அதிக சீரியல்கள் அதிக ரசிகர்கள் என்று இவர்கள் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளனர்.இவர்களது TRP-க்கு முக்கிய காரணமே பல சூப்பர்ஹிட் சீரியல்கள் தான்.சன் டிவியில் 4 தொடர்கள் சில காரணங்களால் கைவிடப்பட்டது, மற்ற சீரியல்களில் சில மாற்றங்களுடன் ஷூட்டிங்குகள் தக்க பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

கடந்த 8ஆம் தேதியே ஷூட்டிங் தொடங்கிவிட்டாலும் இன்னும் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு தேதியை சேனல்கள் அறிவிக்காமலேயே இருந்தனர்.தற்போது சன் டிவி தங்கள் சீரியல்களின் புதிய எபிசோடுகள் வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்கும் என்பதை ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளது.சீரியல் பிரபலங்கள் தங்கள் சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.