பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் திவ்யா துரைசாமி.செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் திவ்யா.அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.

இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவ் ஆக இருக்கும் திவ்யா துரைசாமி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.லாக்டவுன் நேரத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிறைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகின.இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் திவ்யா.

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் திவ்யா துரைசாமி.இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த மதில் திரைப்படம் சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சூர்யா 40 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் திவ்யா துரைசாமி.

கலாட்டாவுக்காக பிரத்யேக நேர்காணலில் தனது சினிமா என்ட்ரி தற்போது பணியாற்றும் படங்கள்,அடுத்தகட்ட திட்டங்கள் போன்ற பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் திவ்யா,சூர்யா 40 குறித்த சில தகவல்களை நம்முடன் பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார்.சூர்யாவின் பெரிய ரசிகை அவருடன் நடிப்பதே பெரும் வாய்ப்பு தான்,சில நாட்கள் அவருடன் ஷூட்டிங் செய்துள்ளேன் மீதமுள்ள நாட்கள் ஷூட்டிங் செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.