“உன்னை கட்டிக்க முடியாது.. வச்சிக்கிறேன்” என்று காதலன் கூறியதால், லிவிங் டு கெதர் ஜோடிக்குள் சண்டை வந்த நிலையில், காதலியின் மீது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிந்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான தனேஸ்வரி என்ற இளம் பெண், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அதே போல், 23 வயதான சிவகுமார் சந்திரசேகர் ஹிரேஹாலா என்ற இளைஞரும், கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் இருவரும் கல்லுாரியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில், இருவரும் கல்லூரி படிப்பை முடித்தப் பிறகு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.

இதனையடுத்து, காதலர்கள் இருவரும் பெங்களூருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் “லிவிங் டு கெதர்” வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளனர். 

இப்படியாக, இந்த காதல் ஜோடியின் வாழ்க்கை உல்லாசமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி சண்டையும் வரத் தொடங்கி உள்ளது.

அப்போது, அந்த காதலி, “நீ என்னை உடனே திருமணம் செய்துகொள்” என்று, தனது காதலனிடம் வற்புறுத்த தொடங்கி உள்ளார். 

ஆனால், கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்காத அந்த காதலன், காலியின் சாதியை சொல்லி கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக, “உன்னை கட்டிக்க முடியாது.. வச்சிக்கிறேன்” என்றும், அவர் கூறி, அந்த இளம் பெண்ணை அசிங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண், காதலன் பணியாற்றும் அலுவலகத்திற்கே சென்று அங்கு, காதலனிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறா். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த காதலன், தனது காதலியை “திருமணம் செய்துகொள்கிறேன்” என்று, பொய் சொல்லி, அவரை அங்குள்ள ஒரு தனிமையான இடத்திற்கு வரவழைத்திருக்கிறார்.

அதனை நம்பி, அந்த பெண்ணும் அங்கு தனியாக சென்றிருக்கிறார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, அந்த இளம் பெண் மீது ஊற்றிய காதலன், கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணின் மேல் தீ வைத்து கொளுத்தி உள்ளான். இதனையடுத்து, அந்த காதலன் அங்கிருந்து தலைமறைவான நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

அந்த மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், காதலியை தீ வைத்து எரிந்த காதலன் சிவகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், பெங்களூருவில் சக லிவிங் டு கெதர் ஜோடிகள் இடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.