பிரியாணி கடைக்கார் ஒருவர், தனது 2 மனைவிகளுக்குத் தெரியாமல் 3 வதாக 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தைச் சேர்ந்த 29 வயதான முகம்மது பாஷா என்பவர், தனது மனைவி உடன் வசித்து வருகிறார்.

இவருக்கு பறானா பானு மற்றும் ஆஜிரா பானு என்ற இரு மனைவிகள் மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இப்படியாக, இந்த மனைவிகளுடன் தான், இவர் வசித்து வருகிறார்.

அதே நேரத்தில், 29 வயதான முகம்மது பாஷா, அங்குள்ள கீழ்விஷாரத்திலுள்ள தனியார் கல்லூரியின் ஏதிரே பிரியாணிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவருடைய பிரியாணி கடையில் எப்போது அமோகமாக கூட்டம் இந்துகொண்டே இருக்கும். விற்பனையும் படு ஜோராக இருக்கும். 
அத்துடன், எதிரில் உள்ள கல்லூரியில் இருந்து ஏராளமான பெண்கள், இவரது கடைக்க அடிக்கடி பிரியாணி சாப்பிட வருவது வழக்கம்.

இப்படியான சூழலில் தான், தனது கடைக்கு வரும் வேறு சில பெண்களும் பிரியாணி கடை ஓனரான 29 வயதான முகம்மது பாஷா, காதல் வலை விரித்திருக்கிறார்.

இந்த சூழலில் தான், கடந்த ஆண்டு நடந்த அவரின் உறவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்கு இந்த பிரியாணி கடைக்கு வருகை தந்திருந்த ஒரு 17 வயது சிறுமியிடம், முகம்து பாஷா காதல் வலை விரித்ததாக கூறப்படுகிறது.

இதனால், முகம்மது பாஷா விரித்த ஆசை வலையில் அந்த 17 வயது சிறுமி சிக்கி உள்ளார். 

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை காதலிப்பதாக பல விதமான ஆசை வார்த்தைகள் கூறி, அந்த இளம் பெண்ணை அந்த பகுதியின் சில இடங்களுக்கு அழைத்துச் சென்று உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், முகம்மது பாஷா அந்த இளம் பெண்ணிடம் ஆசை ஆசையாக பேசி, அவரை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால், அந்த 17 வயதான பெண் கர்ப்பமாக்கி உள்ளார். 

ஆனால், இந்த விசயத்தை முகம்மது பாஷா யாரிடமும் சொல்லாமல், தனது வீட்டில் மறைத்து வந்திருக்கிறார்.
 
இந்த நிலையில், அந்த 17 வயதான பெண் நிறைமாத கர்ப்பிணியான நிலையில், அவரது வயிறும் பெரிதாக தெரிந்த நிலையில், அவர் வீட்டில் பெரும் பிரச்சனை வெடித்து உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணிற்கு முன்னதாக பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, நேற்று முன் தினம் இரவு அங்குள்ள மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

அத்துடன், அந்த 17 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பேரில் அங்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய நிலையில், முகம்மது பாஷாவை போக்சோவில் அதிரடியாக கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது தான், இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆக, இரு மனைவிகளும், குழந்தைகளும் இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, 3 வதாக 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி அவருக்கு குழந்தை கொடுத்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் அதிரடியாக சிறையில் அடைக்கப்படடார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.