தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இன்று ஒரே நாளில் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாமல் சுற்றிச் சுற்றி தாக்குகிறது. இதனால், நாள் தோறும் கொரோனாவின் தாக்கம் காரணமாக அதிக அளவிலான பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,573 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று கொரோனாவுக்க 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,277 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

சென்னையை தவிரத் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கி இருக்கிறது. அதன்படி, சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று மட்டும் 3,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல், தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 66 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனாவால் இதுவரை 755 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2,000 யை கடந்தது. ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 2,032 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாவட்டத்தில் இன்று மட்டும் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், மதுரையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,539 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக பதிவான கொரோனா பாதிப்பு நிலவரம்.. 

சென்னை - 1,140
மதுரை - 464
காஞ்சிபுரம் - 352
திருவள்ளூர் - 337
செங்கல்பட்டு - 219
குமரி - 185
விழுப்புரம் - 143
தேனி - 134
வேலூர் - 129
ராணிப்பேட்டை - 126
தூத்துக்குடி - 122
நெல்லை - 118
சேலம் - 101
திருச்சி - 92
தி.மலை - 83
திருவாரூர்-59
புதுக்கோட்டை-58
க.குறிச்சி-56
ராமநாதபுரம்-43
தென்காசி-39
ஈரோடு-34
சிவகங்கை-29
கோவை-27
நாகை-27
கடலூர்-26
விருதுநகர்-25
தஞ்சை-22
தர்மபுரி-20
திருப்பத்தூர்-16
நாமக்கல்-15
திருப்பூர் -12
கிருஷ்ணகிரி-08
கரூர்-2
பெரம்பலூர் -2
நீலகிரி-40
திண்டுக்கல் -1

என்ற அளவில் கொரோனா பாதிப்பு இன்று பதிவாகி உள்ளது.

அதே போல், தமிழக்தில் மாவட்டம் வாரியாக இன்று பதிவான கொரோனா உயிரிழப்புகள்.. 

சென்னை -24
செங்கல்பட்டு -7
திருச்சி -5
மதுரை -4
ராமநாதபுரம் -4
காஞ்சிபுரம் -3
சிவகங்கை -3
தஞ்சை -3
திருவள்ளூர் -2
தூத்துக்குடி -2
சேலம் -2
தேனி -1
தி.மலை -1
தென்காசி -1
விருதுநகர் -1
திருப்பூர் -1
கிருஷ்ணகிரி -1
கரூர் -1

என்ற அளவில் இன்று கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3,035 பேர், கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,567 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மொத்தம் 44,560 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 16.54 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்  தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.