புதுச்சேரியில் தந்தையே பெற்ற மகளுக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்து, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த 19 வயது இளம் பெண் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த மாணவியின் தந்தை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இதனிடையே, போதைக்கு அடிமையான மாணவியின் தந்தை, தனது சொல்போனில் அதிகமாக ஆபாசப் படங்களைப் பார்த்து, ஒரு வித போதைக்கு அடிமையாகக் கிடந்துள்ளார்.

இது குறித்து, அவரது மனைவிக்குத் தெரிய வந்த நிலையில், தனது கணவனைக் கண்டித்துள்ளார். இது தொடர்பாகக் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது. ஒரு கட்டத்தில், தனது மனைவி மற்றும் மகள் முன்பே அடிக்கடி அவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைத்த அவரது மனைவி, மனைவியிடம் மீண்டும் சண்டைக்குச் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில், ஆபாச போதையின் உச்சிக்கே சென்ற அவர், தனது மனைவி மற்றும் மகளையும் ஆபாசப் படங்களை பார்க்கும்படி வற்புறுத்தி உள்ளார். ஆபாசப் படங்களைக் காண்பித்து மனைவியிடம் முதலில் அவர் பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். 

அதன் பிறகு, குளித்து விட்டு வெளியே வரும் தன் மகள் மற்றும் தன் மனைவி முன்பே நிர்வாண கோலத்தில் வந்து நின்று, அதன் பிறகு அவர் உடைகளை மாற்றி வந்துள்ளார்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, கடந்த 28 ஆம் தேதி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, தன் அருகில் படுத்திருந்த தன் சொந்த மகளுக்கே, தந்தை பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நள்ளிரவில் கூச்சலிட்டுள்ளார். 

சத்தம் கேட்டு அங்குத் தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவி கண் விழித்துப் பார்த்தபோது, மகள் அங்கு அழுதுகொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து, தந்தையின் பாலியல் தொல்லை குறித்து, தனது தாயாரிடம் அந்த மகள் கண்ணீர் மல்க கூறி உள்ளார். கணவரின் செயலால் இன்னும் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, கணவருடன் கடுமையாகச் சண்டை போட்டுள்ளார்.
 
இதனால், அசிங்கப்பட்ட தந்தை, கடும் கோபம் அடைந்து, தனது மனைவியைத் தாக்கி உள்ளார். அதனைத் தடுத்துத் தட்டிக்கேட்ட தன் மகளையும் அவர் தாக்கி உள்ளார். இதில், காயமடைந்த இருவரும் அங்குள்ள கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மகள் தந்தை மீது புகார் அளித்தார். இதனால், அந்த மாணவியின் தந்தை தலைமறைவானார். இது குறித்து பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

இதனிடையே, தந்தையே பெற்ற மகளுக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்து, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்  புதுச்சேரியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.