விழுப்புரம் மாவட்டத்தில் மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூர இளைஞனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்த 48 வயதான கோவிந்தராஜ், மீனவராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் 13 வயதான தேவன் ராஜ், அங்குள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான். தற்போது, கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுவன் தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார். அப்போது, கடந்த 8 ஆம் தேதி அன்று அந்த சிறுவன் திடீரென்று மாயமானார். 

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், அங்குள்ள பல இடங்களில் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில், பயந்துபோன சிறுவவினன் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரன் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான தேவன்ராஜை தீவிரமாகத் தேடி வந்தனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அங்குள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்த 20 வயதான அபினேஷ் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர். இந்த விசாரணையில், தேவன்ராஜை கொன்று கடற்கரையோரம் சவுக்குத் தோப்பில் புதைத்ததாக போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை அவன் கூறியுள்ளான்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இதையடுத்து அந்த இடத்தை அடையாளம் காட்டக் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு அபினேசை அழைத்துச் சென்ற இடத்தை அடையாளம் காட்டச் சொன்னார்கள். முதலில், அங்குச் சென்ற போது நல்ல மழை கொட்டி தீர்த்ததால், அந்த பகுதியே சேறும், சகதியுமாக இருந்தது. அதன் பிறகு, அவனை மீண்டும் காவல் நிலையம் அழைத்து வந்து தங்க வைத்த நிலையில், மற நாள் காலையில், மீண்டும் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்ட சொன்னார்கள்.

அதன் படி, மாணவன் புதைக்கப்பட்ட இடத்துக்கு போலீசார் சென்றனர். அங்கு, தேவன் ராஜ் புதைக்கப்பட்ட இடத்தை அபினேஷ் அடையாளம் காட்டினான்.  அந்த இடத்தில், தேவன் ராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது அந்த சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு, அவனது உடல் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உடலைப் பார்த்த, பெற்றோர், அங்கேயே கதறி அழுதனர்.

மேலும், “மாணவன் தேவன் ராஜை கொலை செய்தது ஏன்?” என்பது குறித்து போலீசார், அபினேஷிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், அபினேஷ் அளித்த வாக்கு மூலம் போலீசாரை கடும் அதிர்ச்சியடையச் செய்தது. 

அதாவது, “கொலையான மாணவனின் தந்தை கோவிந்தராஜ் குடும்பத்துக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அபினேஷ் குடும்பத்துக்கும் பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, ஏற்பட்ட ஆத்திரத்தில் கோவிந்தராஜின் ஒரே மகனை தீர்த்துக் கட்டுவதன் மூலம் அவரது குடும்பத்தைப் பழிவாங்கி விடலாம் என்று, அபினேஷ் திட்டம் தீட்டி உள்ளான். 

இதை நிறைவேற்றுவதற்காக, பறவை பிடிக்கச் செல்லலாம் என்று கூறி நைசாக பேசி தேவன்ராஜை கடற்கரைச் சாலையில் உள்ள சவிக்குத்தோப்புக்கு அபினேஷ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் சரமாரியாக அடித்துத் தாக்கியதில் தேவன்ராஜ் மயங்கி விழுந்தான். இதன்பின் அவனது சட்டையைக் கழற்றி அதை வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

அத்துடன் மட்டும் நில்லாமல், ஈவு இரக்கமின்றி தேவன் ராஜை கொலை செய்த பிறகு, அந்த சிறுவனின் உடலுடன் அபினேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளான். அதன் தொடர்ச்சியாக, சவுக்குத் தோப்பு அருகே உள்ள சுடுகாட்டில் குழிதோண்டி மாணவனின் உடலை புதைத்துவிட்டு அபினேஷ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான். 

அதன் பிறகு தன் மீது சந்தேகம் வராமல் இருக்க எதுவுமே தெரியாதது போல், தினமும் வேலைக்குச் சென்று விட்டு, தன் உள்ளூர் நண்பர்களுடனும் அபினேஷ் சகஜமாக சுற்றித் திரிந்து வந்துள்ளான். 

இதனையடுத்து, காணாமல் போன தேவன்ராஜை கண்டுபிடிப்பதற்காக கூனிமேடு கிராமத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது, அபினேஷ் தேவன்ராஜை அழைத்துச் சென்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது. இதை வைத்துத் துப்பு துலக்கியதில் அபினேஷ் போலீசாரிடம் வசமாக சிக்கினான்” என்று, போலீசார் தெரிவித்தனர். 

இதனையடுத்து, கைதான அபினேஷ் போலீசார் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டது.