கள்ளக் காதல் ஜோடியை குடும்ப உறுப்பினர்கள் எச்சரித்த நிலையில், அவமானத்தால் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மகுடஞ்சாவடி அடுத்து உள்ள கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான சேகர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள காக்காபாளையத்தை சேர்ந்த சுமதி என்கிற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்த தம்பதிக்கு 3 வயதில் கிஷோர் என்ற மகனும், சுரேந்திரன் என்ற 8 மாத குழந்தையும் தற்போது உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், அங்குள்ள ஆட்டையாம்பட்டி அருகே இருக்கும் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 30 வயதான கோமதி என்ற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, அவர்களுக்குள் அந்த பழக்கம் கள்ளக் காதலாக மாறிய நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதில், கோமதிக்கு 10 வயதில் தினேஷ் என்ற மகனும், 9 வயதில் கந்தசாமி என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக் காதல் உறவு இருப்பது கோமதியின் சகோதரி சரசுக்கு தெரிய வந்து உள்ளது. இதனால், இது தொடர்பாகத் தனது சகோதரியிடம் அவர் சண்டைக்கு சென்று உள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இதில், சகோதரியின் இந்த செயல்பட்டாலும் மற்றும் சகோதரியின் இந்த பேச்சாலும், கடும் அவமானம் அடைந்த சரசு, தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சரசின் உறவினர்கள் மற்றும் கோமதியின் உறவினர்கள் சிலர் கோமதியையும், கள்ளக் காதலன் சேகரையும் அழைத்து மிக கடுமையாக எச்சரித்து உள்ளனர். இதனால் சேகரும், கோமதியும் பேசாமல் பார்க்காமல் இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி சேகர், கோமதி ஆகிய இருவரையும் காணவில்லை என்று, அவர்களது உறவினர்கள் அந்த பகுதியின் பல இடங்களிலும் தேடி பார்த்து உள்ளனர். 

அப்போது, அங்குள்ள ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள பாப்பாரப்பட்டி ஏரியில் அவர்கள் இருவரும் சடலங்கள் மிதப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்து உள்ளது.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார். அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கா அங்குள்ள சேலம் அரசு 
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “அவர்கள் இருவரும், கைகளைக் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. 

இது குறித்து, இந்த வழக்கைத் தற்கொலை வழக்காக மாற்றிய போலீசார், அது தொடர்பாக விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், தற்கொலை செய்திகொண்ட இருவரும் கள்ளக் காதல் உறவில் இருந்து வந்ததும், உறவினர்கள் எச்சரித்ததின் காரணமாக, அவர்கள் ஜோடியாக ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், 
பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.