சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல், தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்பட்டது.


 இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் வழங்கப்படும் மற்றும் ஆண்டுதோறும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும். அதிமுகவின் இந்த அறிவிப்பு முன்கூட்டியே வெளியே கசிந்ததுவிட்டதால், இந்த அறிவிப்பை எங்களுக்கு முன்னரே திமுக அறிவித்துவிட்டது. மேலும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் பல அறிவிப்புகள் கொண்ட அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். 


வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதிமுக - அமமுக இணைப்புக்கு சாத்தியமில்லை என்பதை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன் “ என்று தெரிவித்தார்.