தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்று மட்டும் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது. அதன் படி, இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும்  4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,26,581 ஆக உயர்ந்து உள்ளது.

குறிப்பாக, சென்னையில் இன்று ஒரே நாளில் 1,216 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது, தற்போது 73,728 ஆக அதிகரித்துக் காணப்படுகிறது. 

சென்னையை தவிர்த்துப் பிற மாவட்டங்களில் மட்டும் இன்று 3,015 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 169 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மட்டும் அதிகபட்சமாக 364 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 67 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் அதிக பட்சமாக மதுரையில் இன்று 262 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. 

கள்ளக்குறிச்சியில் இன்று 254 பேருக்கும், தூத்துக்குடியில் 196 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று பரவி உள்ளது. 

திருநெல்வேலியில் 110 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி இன்று செய்யப்பட்டு உள்ளது.

முக்கியமாக, நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மகேந்திரகிரி இஸ்ரோ மையம் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்று கொரோனா பாதிப்பு விபரங்கள்..

சென்னை -1216
திருவள்ளூர் - 364
விருதுநகர் - 289
மதுரை - 262
க.குறிச்சி - 254
தூத்துக்குடி - 196
செங்கல்பட்டு - 169
நெல்லை - 110
கோவை - 98
குமரி - 93
திருச்சி - 93
சேலம் - 92
தேனி - 90
வேலூர் - 87
ராணிப்பேட்டை - 79
திருவண்ணாமலை - 70
காஞ்சிபுரம் -67
கடலூர் - 67
சிவகங்கை - 62
ராமநாதபுரம் - 61
தர்மபுரி - 56
புதுக்கோட்டை - 46
திருவாரூர் - 40
விழுப்புரம் - 31
விழுப்புரம் - 31
தஞ்சை - 32
தென்காசி - 29
நாகை - 25
திருப்பத்தூர் - 19
ஈரோடு - 17
நாமக்கல் - 17
நீலகிரி - 13
திருப்பூர் - 6
அரியலூர் - 5
பெரம்பலூர் -5
திண்டுக்கல் - 4
கரூர் - 4
கிருஷ்ணகிரி - 4

என்ற அளவில் இன்று கொரோனா பதிவாகி உள்ளது.

அதே போல், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 பேர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு உயர் இழந்தவர்களில் 43 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 22 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,765 ஆக உயர்ந்து உள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்று ஏற்பட்ட கொரோனா உயிரிழப்பு விவரங்கள்.. 

சென்னை- 23
மதுரை- 9
செங்கல்பட்டு- 7
திருவள்ளூர்- 6
திருச்சி - 6
ராமநாதபுரம் - 5
காஞ்சிபுரம் - 2
தஞ்சை -  2
திருவண்ணாமலை - 2
சேலம் - 1
புதுக்கோட்டை - 1
பெரம்பலூர் - 1

என்று இன்று மட்டும் மொத்தம் 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதே போல், தமிழகம் முழுவதும் இன்று 3,994 பேர் கொரோனா வைரசிடமிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 78,161 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் தற்போது 46,652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

அத்துடன், தமிழகம் முழுவதும் இன்று 42,369 மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 14,91,783 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

அதே போல், தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 6,277 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் உறுதியாகியுள்ளது என்றும், சுகாதாரத்துறை கூறி உள்ளது. அத்துடன், தமிழகத்தில் வேறு நோய் பாதிப்பில்லாத 7 பேர், கொரோனா வைரசால் இன்று உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை ஒன்று, கொரோனாவால் இன்று உயிரிழந்திருப்பது, அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.