காதலன் ஏமாற்றியதால் புகார் கொடுக்க வந்த பெண்ணை, விசாரணை நடத்திய போலீஸ்காரரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதைகள் அதிகம் நடைபெறும் காலம் இது. அதனால் தான், பாதுகாப்பு தரவேண்டிய போலீஸ் அதிகாரிகளே, பெண்களைப் போதைப் பொருளாகப் பாவித்து, விலைமதிப்பற்ற பெண்களின் கற்பை, சூறையாடி.. போலீஸ்காரர்களே திருடர்களாக மாறிவிடுகிறார்கள்.

 Andhra Pradesh cop rapes plaintiff

இந்த கதையில் ஹீரோ தான் (போலீஸ்) வில்லாதி வில்லன்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் அருந்தல்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் ராஜ் இன்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து, காதலின் உச்சம் தொட்டதாகத் தெரிகிறது.

அந்த காதலனும், காதலின் உச்சத்தைத் தினம் தினம் அனுபவித்து, அந்த பெண்ணை காணும்பெத்தால்லாம் கசக்கிப் பிழிந்து உல்லாசம் அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன், காதலியைச் சந்திப்பதைத் தவிர்ந்து வந்துள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காதலி, அங்குள்ள அருந்தல்பேட்டை காவல் நிலையத்தில், காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, கடந்த வாரம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸ் எஸ்.ஐ. பாலகிருஷ்ணா, அந்த பெண்ணின் வசிகத்தில், கிரங்கி... அந்த பெண்ணிடம் காம வயப்பட்டுள்ளார்.

 Andhra Pradesh cop rapes plaintiff

பின்னர், தினமும் விசாரணை என்ற பெயரில், அந்த பெண்ணை காவல் நிலையம் வரவழைப்பதும், அல்லது அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று விசாரணை என்ற பெயரில் அத்துமீறுவதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு எஸ்.ஐ பாலகிருஷ்ணா சென்றுள்ளார். அப்போது, வீட்டில் பெற்றோர் இல்லா நிலையில், அந்த இளம் பெண் மட்டும் இருந்துள்ளார். இதனையடுத்து, தனது காம ஆசைகளை தீர்த்துக்கொள்ள நினைத்த அந்த போலீஸ் அதிகாரி, அந்த பெண்ணின் வீட்டில் வைத்தே, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து, எஸ்.ஐ பாலகிருஷ்ணா உடன் சென்ற மற்ற 2 காவலர்களும், தங்களது ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று, அந்த பெண்ணை வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், அதற்குச் சம்மதிக்காத அந்த பெண், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அவர், புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த எஸ்.ஐ பாலகிருஷ்ணா, அவருடன் சென்ற ராமு, ஹனுமந்த ராவ் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.