புதுக்கோட்டை அருகே இளம் பெண்ணை கடத்தி 2 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 24 ஆம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக வெளியே வந்துள்ளார். 

 Girl kidnapped and raped in Pudhukkottai

அப்போது, வீட்டின் அருகே உள்ள தரிசு நிலப் பகுதிக்குச் செல்ல முற்பட்டுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், இந்த இளம் பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர், அருகில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அந்த பெண்ணை சிறை வைத்து, கடந்த 2 நாட்களாக மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து, கடும் சித்ரவதை செய்துள்ளார்.

இதில், அந்த பெண் மயங்கிவிடவே, செய்வதறியாது அந்த நபர் நின்றுள்ளார். இதனிடையே, பெண்ணை காணவில்லை என்று, இளம் பெண்ணின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, இளம் பெண்ணின் பெற்றோருக்கு போன் செய்து, அந்த பெண் குறிப்பிட்ட தன் வீட்டில் இருப்பதாகக் கூறிவிட்டு, போனை துண்டித்துள்ளார். இதனால், பதறிப்போன இளம் பெண்ணின் பெற்றோர்கள் விரைந்து சென்று அந்த வீட்டில் பார்த்துள்ளனர்.

அங்கு, அந்த பெண் மயங்கிய நிலையில் கிடக்கவே, அந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 Girl kidnapped and raped in Pudhukkottai

இதனையடுத்து, வழக்குப் பவுதி செய்த போலீசார், இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கடத்தி வைக்கப்பட்ட வீடு, ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருப்பதால், எவ்வளவு சத்தம் போட்டாலும் வெளியே கேட்காது என்றும், யாருக்கும் உதவிக்கு வரமாட்டார்கள் என்ற சூழல் அங்கு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இளம் பெண்ணை கடத்தி 2 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.