16 வயது சிறுவனை 16 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“மனிதனை, மனிதனே சாப்பிடும் காலம் என்பார்களே.. அது, இது தான் போல!?” சில மனித மிருகங்களைப் பார்க்கையில் தான், இனம் புரியாத பயமெல்லாம் சூழ்ந்துகொள்கிறது.

 16 men raped a 16 year old girl in Kerala

அப்படியொரு நிகழ்வுதான் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் நடந்து, அந்த மாநிலத்தையே, பேரதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் சிவதாசன் என்பர் ஆட்டோ பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். அங்கு, அவரது நண்பர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தினமும் கூடுவது வழக்கம்.

அப்படி, அந்த பகுதியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 16 வயது மாணவன், அந்த கடை வழியாகப் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அப்படி அந்த மாணவன் பள்ளிக்குச் செல்லும்போதும், மாலையில் வீடு திரும்பும்போதும், மாணவனைச் சிலர் நோட்டம் இட்டுள்ளனர்.

 16 men raped a 16 year old girl in Kerala

சிறுவன் பார்ப்பதற்குக் கொஞ்சம் அழகாக இருந்ததால், ஆணிடமே, அந்த காமுகர்கள் காம மயமாகிப் போனார்கள். 

இதனையடுத்து, சிறுவன் அந்த கடையைக் கடந்து செல்லும்போது, அவனை வழிமறித்த ஒரு கும்பல், அந்த கடைக்குள் அழைத்து வந்து, சிறுவனைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, அவர்களது இச்சைக்கு இணங்க வைத்து, மாறி மாறி பாலியல் தொல்லை கொடுத்து, பலாத்காரம் செய்துள்ளனர்.

கிட்டதட்ட பல மாதங்கள் நடைபெற்ற இச்சம்பவத்தில், மொத்தம் 16 பேர் சேர்ந்து, அந்த 16 வயது சிறுவனை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால், உடல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் உடல் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த சிறுவன், தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளான்.  

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள், அங்குள்ள வலஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைப் பார்த்ததும் பேரதிர்ச்சிக்குள்ளான போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்தனர். பின்னர், சிறுவனைப் பலாத்காரம் செய்த 16 பேரில் சிவதாசன், சமீர், அப்துல் சமத், முகமத் கோயா, மொய்தீன் குட்டி, லியாகத், ஜலீல் ஆகிய 7 பேரை உடனடியாக கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கை, குழந்தைகள் நல வாரியமும் கண்காணித்து வருகிறது. இதனால், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, 16 வயது மாணவனை, 16 பேர் சேர்ந்து பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.